கிளிநொச்சி மாவட்டதில் இரண்டு பாடசாலைகளுக்கும் பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ;(படங்கள்)

350 0

கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் கண்டாவளை மகாவித்தியாலயம் மற்றும் ஆனையிறவு தட்டுவன்கொட்டி கண்ணகை அம்மன் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளுக்கும் பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

குறித்த இரண்டு பாடசாலைகளுக்கும் பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றர்.

இதன்போது வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன், பான்ட் வாத்தியக் கருவிகளை பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

குறித்த பாடசாலைகளுக்கு கடந்த ஆண்டு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், பாடசாலை சமூகத்தால் முன்வைக்கப்பட்ட பாண்ட் வாத்திய தொகுதிக்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சர், தனது பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து அவர்களுக்கான பாண்ட் வாத்திய தொகுதியை கொள்வனவு செய்து வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வின்போது வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வடக்கு சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ப.சீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.