‘மொட்டு’ எம்.பிக்களை சந்தித்தார் கப்ரால்

158 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை நேற்று (11) சந்தித்து கலந்துரையாடியதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இன்று (12) தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட விளக்கமளித்தாகவும் அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்ததாகவும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.