வித்தியானந்தா கல்லூரியின் தொழிநுட்ப கட்டட தொகுதி திறந்துவைப்  (படங்கள்)

308 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் தொழிநுட்ப ஆய்வுகூட கட்டட தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் திறந்து வைக்கப்பட்டது.

இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்துவைக்கப்பட இருந்த குறித்த கட்டடத்தொகுதி இறுதி நேரத்தில் ஜனாதிபதி வருகை தராததன் காரணத்தால் பாராளுமன்ற உறுப்பினர் த சித்தார்த்தனால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வடக்கு மாகாண பிரதி அவைத் தலைவர் கமலேஸ்வரன், வடக்கு மாகானசபை உறுப்பினர்  க.சிவநேசன், ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன், பொலிஸ்மா அதிபர் பூசித வியஜசுந்தர, முல்லைத்தீவு இராணுவ கட்டளை தளபதி மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று ஜனாதிபதி தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருந்த நிலையில், காலநிலை காரணமாக அவரது வருகை தடைப்பட்டபோதும் நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றன.