ஜனாதிபதியின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

196 0

ஜனாதிபதியின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமசந்திர உட்பட்ட பெண்களே மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தன்னையும் தனது குடும்பத்தவர்களையும் முகக்கவசம் அணி;ந்த அடையாளம் தெரியாத நபர்கள் பின்தொடர்கின்றனர்-தொலைபேசிகள் இடைமறித்து ஒட்டுக்கேட்கப்படுகின்றன என தெரிவித்துள்ள ஹிருணிகா பிரேமசந்திர ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியின் செயலாளர் வீட்டிற்கு சிஐடியினரும் மிரிகான பொலிஸாரும் சென்றுள்ளனர் என குறிப்பிட்டுள்;ளார்.

சிவில் உடையில் சென்ற நபர்கள் அவரை விசாரித்துள்ளனர் என தெரிவித்துள்ள ஹிருணிகா இதனை தொடர்ந்தே மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.