முல்லைத்தீவு கோப்பாப்புலவு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள்)

362 0

 

முல்லைத்தீவு கோப்பாப்புலவு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு இன்றைய தினம் விஜயம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கேப்பாப்பிலவு மக்கள் கேப்பாப்புலவு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக, இன்று காவை 9 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக்கு ஜனாதிபதி வருகை தரும்போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என, இராணுவத்தினர் எச்சரித்திருந்த நிலையிலும், அப்பகுதி மக்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.