பண்டாரவளையிலிருந்து எல்ல நகருக்கு வானொன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 852 பியர் போத்தல்களுடன், இரு சந்தேகநபர்களை பண்டாரவளை பொலிஸ் புலனாய்வுபிரிவினர் நேற்று கைது செய்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே சந்தேக நபர்கள் கது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, பியர்போத்தல்கள் அடங்கிய 21 பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.