13 திருத்தத்தில் எவ்விதமான பாதுகாப்பும் இல்லை

295 0

இந்தியா தமிழ் மக்களை அவர்களது அடிமைகளாக அடக்ககூடாது தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகள் நன்கு தெரியும் எனவே அதனை அமுல்படுத்தும் விதமாக உங்கள் செயற்பாடு இருக்கவேண்டும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட காரியாலயத்தில் சனிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

இன்று சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக கோதபாய அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்காக திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கின்றனர். அது முற்று முமுதாக சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாகவே நடைபெற்றுக் கொண்டிக்கின்றது இந்த நிலையிலே ஒரு சில மாதங்களில் அந்த அரசியல் யாப்பை முன்வைப்பதற்காக ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் சீனாhவின் வருகையையடுத்து கட்டுப்படுத்துவதற்கதக இந்தியா எவ்வாறான விடையங்களை செய்யவேண்டும் என இந்த அரசோடு பேசி இலங்கையில் இருக்கின்ற தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் அடக்க கூடியவாறு பேசி செய்து தருவோம். எனவே நீங்கள் சீனாவின் உடைய வருகையை மட்டுப்படுத்த வேண்டும்.
இந்த நிலைப்பாட்டிலே இந்த அரசியல் அமைப்பு கொண்டுவரப்படுகின்றது குறிப்பாக 13 வது திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றது அது 1987 ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் இந்த 13 வது திருத்தம் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் அது கொடுக்கவில்லை மாறாக தமிழ் மக்கள் தொடர்ந்து அடக்குமுறையான காணி அபகரிப்புக்கள் வாழ்வியல் என முழுக்க அழிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் இங்கு இருக்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்ந்த ஏனைய அரசியல் தலைவர்கள் மீண்டும் அதனை புதுப்பிக்கும் விதமாக வந்து அந்த அரசியல் அமைப்பிலே 13 வது திருத்தத்தை புகுத்தி அதிலே மாகாணசபை முறைமைகளை இருப்பதாக காட்டிக் கொண்டு தாங்கள் சொல்லித்தான் அரசு அந்த வேலைத்திட்டத்தை செய்கின்றது என்ற நிலைப்பாட்டை காட்டுவதற்காக இந்த 6 கட்சிகள் கடந்த 18-1-2022 இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது

இது ஒரு தமிழ் மக்களை மீண்டும் ஒரு சதிவலையான அழிவுக்குள் கொண்டு போhவதற்கான ஒரு சாவுமணியாகத்தான் இருக்கின்றது. தமிழ் மக்களை பொறுத்தமட்டிலே 1948 ம் ஆண்டில் இருந்து இதுவரைக்கும் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிவருகின்றார்கள் அன்றில் இருந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வந்து அடக்குமுறைக்கு உட்பட்டுவருகின்றார்கள் அவருடைய உரிமை பறிக்கப்பட்டுள்ளது இறையாண்மை கையகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது இந்திய தன்னுடைய தேசிய பாதுகாப்புக்காக இங்கே இருக்கின்ற தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் வெறுமனவே தங்களின் நலனுக்காக மட்டும் எங்களுடைய மக்களின் அபிலாiஷகளை துக்கி எறிந்துவிட்டு வெறுமனவே உப்பு சப்பு இல்லாத 13 திருத்தத்தை கொண்டுவருவதற்குரிய தங்களுடைய கைகூலிகளாக இருக்கின்ற முகவர்களை இங்கே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்

மக்கள் ஒன்றை தெளிவாக விளங்கி கொள்ள வேண்;டும் இந்த 13 திருத்தத்தில் எவ்விதமான பாதுகாப்பும் இல்லை அது கடந்த 34 வருடங்களுக்கு மேலாக நிராகரிக்கப்பட்ட ஒன்று அந்த அடிப்படையில் இப்போது சரியான தலைவர்களை இனங்கண்டுள்ளனர்.

6 தலைவர்களால் தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்ட கடிதம் தொடர்பாக நேற்றைய தினம் நியாயம் கற்பிக்க 6 தலைவர்களும் இனைந்து ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்தியுள்ளனர் எனவே இவர்கள் தான் இந்தியாவினுடைய கைக்கூலிகளும் அவர்களுடைய எடுபிடிகளுமாக இருக்கின்றனர்.

இந்தியாவுக்கும் எமக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லை ஆனால் தமிழ் மக்களை அவர்களது அடிமைகளாக அடக்ககூடாது தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகள் நன்கு தெரியும் எனவே அதனை அமுல்படுத்தும் விதமாக இந்தியாவின் செயற்பாடு இருக்கவேண்டும்.

எனவே இவர்கள் எங்களுடைய மக்களில் எவ்வித அக்கறையும் இல்லாமல் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் இனைந்த வடகிழக்கு இறையாண்மை சுயநிர்ணய உரிமை அதற்கான சமஷ;டி தீர்வு தேவை என கடந்த கால தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்து விட்டு இங்கே வந்து வெறுமனவே ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை முடக்குகின்ற சதி முயற்சியை செய்கின்ற இந்த தமிழ் தலைவர்களை மக்கள் ஓரங்கட்டவேண்டும்

தொடர்ந்து கடந்த காலத்தில் 3 யாப்புக்கள் வந்தது இந்த மூன்று யாப்புக்களும் ஒற்றையாட்சிக்குட்பட்டவை இப்போ நான்காவதாக கொண்டுவரப்படும் யாப்பும் ஒற்றையாட்சிக்குட்பட்டது எனவே இதனை இந்த இடத்திலே எதிர்க்காவிட்டால் இந்த நாட்டிலே தமிழர்கள் வாழமுடியாத ஆபத்து ஏற்படும் எனவே இதற்கு எதிராக தமிழர்கள் அனைவரும் அணிதிரளவேண்டும்

நாளை 30 ம்திகதி யாழ்ப்பாணத்தில் நடை பெற இருக்கின்ற அந்த போராட்டத்துக்கு புலம்பெயர்ந்து இருக்கின்ற மக்களின் உறவுகளுக்கு நீங்கள் அழைப்பு விடுக்கவேண்டும. அதேபோன்று கிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் போராட்டத்தில் வலுச் சேர்க்கவேண்டும் அவ்வாறே தமிழ்நாடு புலத் பெயர்ந்த மக்கள் வாழுகின்ற நாடுகள் அனைவரும் அந்த போராட்டத்துக்கு வலுச் சேர்க்க வேண்டும்