கொரோனாவினால் பாதிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

248 0

இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வருடத்தில் இருந்து இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி கவிரட்ன மற்றும் திலும் அமுனுகம ஆகியோர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் ஜயந்த வீரசேகர மற்றும் அமரகீர்த்தி அத்துகோரல ஆகியோர் நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.