வலி. மேற்கு முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு

183 0
வலி. மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, இன்று (25) ஆரம்பமானது.

எனினும், இந்தக் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு, பிரதேச சபை உறுப்பினர்களும் முன்பள்ளி ஆசிரியர்களும் ஒன்றிணைந்து, பிரதேச சபைக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரியும், சம்பள அதிகரிப்பை கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.