முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 3.00 மணியவில் இராணுவ புலனாய்வாளர்கள் வீதியால் சென்ற டிப்பரினை வழிமறித்து சாரதிமீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இருப்பு கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கண் மற்றும் முதுகு பகுதிகளில் காயமடைந்த நிலையில் டிப்பர் சாரதி புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் இன்று அதிகாலையில் டிப்பருடன் புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் பயணித்த வேளை டிப்பரினை மறித்த சிவில் உடை தரித்த இராணுவ புலனாய்வாளர்கள் டிப்பரில் எதுவும் இல்லாத நிலையில் சாரதியினை இறக்கி இரும்பு கம்பியினால் தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்

.இவர் தற்போது புதுக்குடியிருப்பு ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புலனாய்வாளர்கள் டிப்பரில் என்ன இருக்கின்றது என்று கேட்டார்கள் டிப்பரில் ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார்.இராணுவ புலனாய்வாளர்கள் இருவர்  மதுபோதையில் நின்று என்மீது கம்பியால் தாக்கியுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கண்ணில் காயமடைந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கைவேலி பகுதியினை சேர்ந்த 41 அகவையுடைய நவரத்தினம் உதயசீலன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.இதன்போது பாதிக்கப்பட்ட நபரின் நண்பர்களை இராணுவ முகாமிற்கு அழைத்து பேசிவருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.