காணாமல் போன தனது மகனைத் தேடி வந்த தாய் மரணம்!

199 0

வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று மரணமடைந் துள்ளார்.

வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியைச் சேர்ந்த கருப்பையா ராமாயி (வயது 78) என்ற தாயே இவ்வாறு மரணமடைந் துள்ளார். இவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் வயது 38 கடந்த 2007ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

அவரைத் தேடி வவுனியாவில் கடந்த 1799 நாட்களாக முன்னெ டுக்கப்பட்டு வரும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட் டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தரப் போராடியிருந்தார்.