மக்கள் தயாரென்றால், அதிகாரத்தை உடனே கைப்பற்றுவேன்- மஹிந்த ராஜபக்ஷ

318 0

mahinthaமக்கள் தயாரென்றால், அதிகாரத்தை உடனே கைப்பற்றுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

டுவிட்டரின் ஊடாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் தயாரென்றால், அதிகாரத்தை உடனே கைப்பற்றுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டமை, தப்பியோடுவதற்கு அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் பெற்றுள்ள கடன் அளவின் அடிப்படையில், அபிவிருத்திகள் நாட்டில் முன்னெடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.