துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

178 0

அங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலினால் 42 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.