வவுணதீவு வயலில் ஆர்பிஜி லோஞ்சர் மீட்பு

165 0

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த ஆர்பிஜி லோஞ்சர் ஒன்றை, நேற்று முன’தினம் (24) மாலை மீட்கப்பட்டுள்ளதாக, வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.

குறித்த வயலில் உழவு இயந்திரம் மூலம் உழவு நடவடிக்கையில் வயல் உரிமையாளர் ஈடுபட்டுள்ள நிலையில், நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்து  ஆர்பிஜி லோஞ்சா ஒன்று நிலத்தில் இருந்து வெளியே வந்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த ஆர்பிஜி லோஞ்சர் மீட்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.