அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

181 0

முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியாளர் சந்திப்பு ஒன்றில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்தமை தொடர்பில் இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் குணரத்ன தலைமையில் விசாரணைக்கு இன்று (25)எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 02ஆம் திகதி முதல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.