நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன அனுமதிப்பத்திரம்

168 0

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் சுங்க வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் அனுமதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் வைத்து பிரதமர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தான் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இல்லை என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி (Thisakutti Arachchi) கூட்டத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் கருத்து வெளியிட்ட பிரதமர், பொருளாதார நெருக்கடி காணப்படும் சந்தர்ப்பத்தில் தமக்கு வாகனங்கள் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதால், வாகனங்களை வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.