’இனி பொலிஸார் அவசியம் இல்லை’

166 0

இன்று முதல், பாடசாலைகளுக்கு அருகில் விசேட பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, கடந்த 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த ஆசிரியர் குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, அந்த இரண்டு நாள்களிலும் பாடசாலைகளுக்கு அருகாமையில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, ஆசிரியர் – அதிபர்கள் குழுவினருக்கு பணிக்கு வர வேண்டாம் என மிரட்டியவர்களுக்கு, பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அமைச்சர் கூறினார்.