கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவர் கைது (காணொளி)

330 0

kili-kanchaகிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் 1200 கிராம் கஞ்சாவுடன், நீர்கொழும்பைச் சேர்ந்த 30 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆர்ப்படுத்தப்பட்ட நிலையில்,நீதிமன்று சந்தேக நபரை சம்பவம் தொடர்பில் வினவியபோது, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றிற்கு முன்னால் அமைந்துள்ள  துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும், தாம் சில பிதிர்க் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைப்பதாகவும் மன்றில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக குறித்த ஆலயத்தின் பதிவு மற்றும் ஆலயத்தை சோதனையிட மன்று வழங்கிய உத்தரவுக்கமைய கிளிநொச்சிப் பொலிசார் மற்றும் கரைச்சி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அமல்ராஜ் மற்றும் கலாச்சார  உத்தியோகத்தர், கிராம அலுவலர் கின்சான்கொல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரெயினோல்ட் ஆகியோர் இணைந்து சோதனை நடவடிக்கையில்  ஈடுபட்டிருந்தனர்.

இருப்பினும் எவ்விதமான சந்தேகத்திற்குரிய பொருட்களும் இதன்போது மீட்கப்படவில்லை. அத்துடன்  குறித்த ஆலயம்  பதிவற்ற  ஆலயம் என்பதுடன், தனியார் காணி ஒன்றில் அத்துமீறி  அமைக்கப்பட்டுள்ளதுடன் ஒருபகுதி வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் என்பது குறிப்பிடத்தக்கது.