பதுளை பொது மருத்துவமனையின் சத்திரசிகிச்சை நிபுணர் திடீர் மரணம்

159 0

பதுளை பொது மருத்துவமனையில் பணியாற்றிய சிரேஷ்ட சத்திரசிகிச்சை நிபுணர் கடந்த 5 ஆம் திகதி மாலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

காலி, வக்வல்லவைச் சேர்ந்த சானக ஹலிந்த லொக்குகே எனும் 46 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மருத்துவர் பதுளை கைலாகொட பகுதியிலுள்ள வீடொன்றில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.

தனது வீட்டில் சுயநினைவின்றி மருத்துவர் இருப்பதை அறிந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பதுளைக் கிளைத் தலைவர் பாலித ராஜபக்ஷ மற்றொரு சுகாதார ஊழியருடன் இணைந்து உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். பின் அங்கிருந்து பதுளை பொது மருத்துவ மனைக்கு மருத்துவரைக் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.