களுத்துறை மாவட்டத்தில் 18 மணிநேர நீர்வெட்டு

163 0

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 8.00 மணி தொடக்கம் நாளை அதிகாலை 2.00 மணிவரை 18 மணிநேரம் நீர்வெட்டு அமுலில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பேருவளை, அளுத்கம, தர்கா நகரம், பெந்தரா, களுவாமோதர, பிலிமத்தலாவ, பொம்புவாலா, பயகல மற்றும் மகோனா ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமுலில் இருக்கும்.

அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்தை கூட்டு நீர் வழங்கல் திட்டத்தில் அவசர பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாகவே மேற்கண்ட பகுதிகளில் 18 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும்.