கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது

162 0

யாழ். சுழிபுரம் ஜே/170 கிராம சேவகர் பிரிவில் பொலிஸ் விசேட அதிரடிப்படை நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் வீடு ஒன்றில் இருந்து, கோடரி மற்றும் முள் கம்பி சுற்றப்பட்ட கட்டை உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது நேற்று (06) செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொன்னாலை – சுழிபுரம் பகுதியில் வீடு ஒன்றில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் உள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டது.

குறித்த வீட்டினை சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் வாள் ஒன்றும் கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டது.

இதனை அடுத்து வாளை வைத்திருந்த குற்றாச்சாட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட் நபரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் குறித்த பகுதியில் உள்ள பிறிதொரு வீட்டில் இருந்தும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் வாள் மீட்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.