நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் செயற்பாட்டினை எதிர்த்தே வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு வருவதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் இணைப்பாளர் ரஞ்ஜன் ஜயலால்(Ranjan Jayalal) தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் மின்சாரசபை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில் மீண்டும் நாடு முழுவதும் மின்தடை ஏற்படும் ஆபத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.