நாற்பது பின்வரிசை எம்.பிக்கள் கையெழுத்திட்ட கடிதம் சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்பட்டதாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை விரைவில் திறக்க தீர்மானம் செய்துள்ளதால், பாராளுமன்றத்தின் பொது கலரியையும் திறக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.