இன்றைய தினம் புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாகவும்,ஆண்டங்குளத்தில் அமைந்துள்ள மடு கல்வி வலயத்திற்கு முன்பாகவும் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், ஆசிரியர் சேவைகள் சங்கம் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டனர்.