கட்டுத்துவக்குடன் ஒருவர் கைது

252 0

திருகோணமலை, கோமரங்கடவெல பகுதியில் கட்டுத்துவக்கு ஒன்றினை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த சந்தேக நபரொருவரை இன்று (06) கைது செய்துள்ளதாக கோமரங்கடவெல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மல்போசல, கோமரங்கடவெல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரேயே கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.