நிரூபமா ராஜபக்ஷவிற்கு அவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது? – நளின் பண்டார

207 0

நிரூபமா முன்னாள் பிரதி அமைச்சராகும். பிரதி அமைச்சரிடம் அவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது. தற்போது வரையிலும் நிரூபமாவின் கணவருக்கு விஐபி சலுகைகள் வழங்கப் படுகின் றது. இவை எந்த பின்னணியில் வழங்கப்படுகின்றதெனத் தெரியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பண்டோரா ஆவணங்களை வெளிப்படுத்திய முறையில் நிரூபமா ராஜபக்ஷவிடம் 35,000,000,000 ரூபா சொத்துக்கள் உள்ளதென நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார் அரசாங்கம் தொடர்ந்து இவற்றினை பொய் என கூறுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.