கொரோனா தொற்றால் மேலும் 40 பேர் பலி

171 0

நாட்டில் கொரோனாத் தொற்றால் மேலும் 40 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்தஎண்ணிக்கை 13 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் உயிரிழந்த 40 பேரில் 22 ஆண்களும், 18 பெண் களும் உள்ளடங்குகின்றனர் என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 3 ஆண்கள், பெண் ஒருவர் என 4 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட வர்களாவர். 36 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட வர்களாவர். இதில் 19 ஆண்களும்,17 பெண்களும் அடங்குகின்றனர்.