சதொச நிறுவனத்தில் மோசடி நடப்பது இது முதல் முறை அல்ல – பந்துல

154 0

பாரிய வெள்ளைப்பூண்டு மோசடி நடந்திருப்பதை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

மேலும் லங்கா சதோசாவில் இதுபோன்ற மோசடி நடப்பது இது முதல் முறை அல்ல என்றும் முந்தைய ஆட்சியின் போது இதுபோன்ற மிகப்பெரிய மோசடிகள் தொடர்பான ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த பூண்டு மோசடி சதொச தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு தெரியாமல் நடந்ததாகக் கூறினார்.

இந்த மோசடி தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

பிரதமரோ அல்லது தானோ பூண்டு மோசடி குறித்து புகாரளித்த ஊடகவியலாளர்களிடம் அறிக்கைகளைப் பதிவு செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடவில்லை என்றும் அது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்களை விசாரிக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அமைச்சகம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்த ஆதாரங்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்து வருகிறது எனவும் அமைச்சர் கூறினார்