புதுக்குடியிருப்பில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

155 0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட 2 ஆம் வட்டாராம் கோபம்பாவில் பகுதியில்நேற்று முன்தினம்(03) தனியார் காணி ஒன்றில் சட்டவிரோதாக அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேரை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

குறித்த காணியில் தோண்டுவதற்கான அனுமதி இன்றி கனரக இயந்திரம் கொண்டு தோண்டும் நடவடிக்கை முன்னெடுத்த வேளை சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கோம்பாவில்,மன்னாகண்டல்,யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதான சந்தேக நபர்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.

இவர்களை எதிர்வரும் 12.10.21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.