மட்டக்களப்பில் கையூட்டல் பெறமுயன்ற அரச ஊழியர் கைது!

155 0

மட்டக்களப்பு – களுதாவளை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் பணிபுரியும் வருமானவரி பரிசோதகர் ஒருவர் இன்று (05) கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச பிரதேச சபைக்கு முன்னால் வைத்து, கொழும்பிலிருந்து வருகை தந்த கையூட்டல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபரான அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ தினமான இன்று, பிரதேச சபைக்கு முன்னால், மகிழுந்து ஒன்றில் வந்த நபரிடம் குறித்த வருமான வரி பரிசோதகர் கையூட்டல் பெற முயன்றுள்ளார்.

அதன்போது, அவ்விடத்துக்கு வருகைதந்த கையூட்டல் ஆணைக்குழுவினர், இலஞ்சம் வழங்க முயன்ற நபரையும், பெறமுயன்ற வருமான வரி பரிசோதகரையும் கைதுசெய்துள்ளனர்.