இலங்கையில் டொலர்கள் இல்லை என்று இந்திய வியாபாரிகள் சீனியை வழங்கத் தயக்கம்

146 0

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியால் இந்திய வியாபாரிகள் இலங்கைக்குச் சீனியை வழங்கத் தயங்குவதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டொலர் பற்றாக்குறை காரணமாக சீனி இறக்குமதி தொடர்பான கோப்புகளை ஏற்றுக்கொள்வது குறித்து இந்தத் தடவை வணிக வங்கிகள் மறுப்பை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனி இறக்குமதிக்கு அரசாங்கம் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. டொலர் பற்றாக்குறையால் இறக்குமதியாளர் கள் கடுமையாகப் பாதிக்கப்பட் டுள்ளனர்.

இந்தியாவில் சீனியின் விலை உயர்ந்துள்ளதால் இலங்கையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் சீனியை விற்க முடியாது என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.