கஹதுடுவ ரிலாவல சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியானார் உயிரிழந்தவர்
62 வயதுடைய ரிலாவல, பொல்கஸ் ஓவிட்டவில் வசிப்பவராவார்.
இன்று காலை குறித்த பெண் கவனயீனமாக வீதியைக் கடக்க முயன்ற போது ஹொரணையிலிருந்து வேகமாக வந்த பஸ் ஒன்று மோதியதிலேயே அவர் உயிரிழந்தார்.
குறித்த பஸ் நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்களை ஏற்றியவாறு சென்று கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் நிகழ்ந்தது.
விபத்தில் தூக்கி வீசப்பட்ட பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
மஹரகமவிலுள்ள அபேக்ஷா மருத்துவமனை கிளினிக்குக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த அவலத்தை அப்பெண் சந்தித்தார்.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டு இன்று கெஸ்பாவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட விருந்தார்.