வவுனியாவில் இளைஞன் சடலமாக மீட்பு

192 0

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கூமாங்குளம் பல்லவன் வீதியை சேர்ந்த 30 வயதுடைய சின்னையா ஜெசிந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்றையதினம் இரவு கூமாங்குளத்தில் உள்ள தனது அம்மம்மாவின் வீட்டில் இரவு நித்திரைக்கு செல்வதற்காக சென்றவரே இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.