பெருந்தோட்ட நிறுவனங்களுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு தயார் – வடிவேல் சுரேஷ்

158 0

பெருந்தோட்ட நிறுவனங்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்கான வேதனம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யக்கோரி பெருந்தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று(04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வழக்கு தினத்திற்கு முன்பதாகத் தொழிற்சங்கத்தினரும், பெருந்தோட்ட நிறுவனங்களும் பேச்சுவார்த்தையை நடத்தி சுமுக இணக்கப்பாட்டிற்கு வருமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.