வெள்ளைப்பூண்டு மோசடி: உயர் மட்ட விசாரணை ஆரம்பம்

118 0

வர்த்தக அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், சதொசயில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி குறித்து உயர் மட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, பாராளுமன்றத்தில், இன்று (4)  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிடைக்கப்பெறும் எந்த தகவலையும், ஆதாரங்களையும் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்களையும், இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

துஷான் குணவர்தன விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டும் என்றும் தகவல், அதாரங்கள் கிடைத்தவுடன் விசாரணை முடிவடையும் என்றும், அழகியவண்ண கூறினார்.