யானைகளின் அட்டகாசத்தினால் அச்சத்தில் கிளிநொச்சி மக்கள்

133 0

கிளிநொச்சி- கல்மடுநகர் பகுதிக்கு வருகை தரும் யானைகள், பயன்தரக்கூடிய பயிர்களை அழித்து  பாதிப்பு ஏற்படுத்துவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தினமும் இரவு வேளைகளில், மக்கள் குடியிருப்புகளுக்குள் வரும் யானைகள் இவ்வாறு பயன்தரக்கூடிய பயிர்களை அழித்துவருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு அச்சத்தின் மத்தியில் ஒவ்வொருநாளையும் கடக்கவேண்டிய நிலையில் இருப்பதாகவும் இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மின்வேலி அமைத்துதருவதாக பல வருடம் எம்மை ஏமாற்றிவருவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எம்மையும் எம் உடமைகளையும் யானை அழித்தபின்னர், மின் வேலி அமைக்கப்படும் என மிக வேதனையுடன் தமது ஆதங்கத்தினை  அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆகவே,  இந்த விடயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.