உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பம்

160 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (04) முதன்முறையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை இன்று நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.