அதிகளவான பேருந்துகள் இன்று முதல் சேவைக்கு

131 0

மட்டுப்படுத்தப்பட்ட அரச சேவையாளர்கள் பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அரச பேருந்துகளை அதிகளவில் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கை போக்குவரத்து சபை இதனைத் தெரிவித்துள்ளது.

பயணிகள் நெருக்கடியின்றி பயணிப்பதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், அரச சேவைகளுக்காகத் தொடருந்துகளில் பயணிப்போரைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்