சிறுநீரக செயலிழப்பால் சிறுவன் பலி

182 0
வடமராட்சி பகுதியில், சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில், 16 வயது  சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 11ஆம் தரத்தில் கல்வி கற்ற  கரணவாய் தெற்கு – மண்டான் பகுதியைச் சேர்ந்த கணேசன் கிருசிகன்  (வயது 16) என்ற நிறுவன, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

உடல் நலக் குறைவு காரணமாக, வெள்ளிக்கிழமை(01) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனையில், இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.