யாழ் மாவட்டமே முதலிடம்

151 0

60 வயதுக்கு மேற்பட்ட 85,000 பேர் இதுவரை எவ்வித கொரோனா தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளவில்லை என, கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகமானவர்கள் யாழ் மாவட்டத்தில் உள்ளனர் என்றும் அதற்கமைய, யாழ் மாவட்டத்தில் இதுவரை 20,000 பேர் எவ்வித தடுப்பூசியையும் ஏற்றிக்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 3,000 பேர்  வரை தடுப்பூசி எதனையும் ஏற்றிக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.