யாழில் மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு 125,500 ரூபா அபராதம்!

232 0

மதுபோதையில் போக்குவரத்து விதிகளை மீறி மோட் டார் சைக்கிளில் பயணித்த வருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நளினி சுதாகரன் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்தார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப் பட்டது. சந்தேக நபரை நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப் பத்திரம், வரிப் பத்திரம் என்பவை இல்லாது வாகனம் செலுத்தியமை தலைக் கவசமின்றி ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை, தலைக்கவசம் அணியாதவரை பின் இருக்கையில் இருத்தி அழைத்துச் சென்றமை, பொலிஸாரின் சமிக்ஞையை மீறி வாகனம் செலுத்தியமை என 7 குற்றச்சாட்டுகளை பொலிஸார் முன்வைத்தனர்.

தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் குறித்த நபர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து குற்றவாளிக்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.