கொரோனா வைரஸ் தொற்று எதிர்ப்பு தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாதவர்கள் வீடுகளில் இருந்தால் அருகில் உள்ள தடுப்பூசியை ஏற்றும் மத்திய நிலையத்துக்கு, கூடிய விரைவில் அழைத்து வாருங்கள் என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
அது ஒவ்வொரு வீட்டினதும் பொறுப்பாகும் என்றார்
கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சமூகத்தில் பரவும் பல்வேறான கதைகளால் பலருக்கு தேவையில்லாமல் அச்சம் கொண்டுள்ளனர் என்றார்