ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 64 பேருக்கும் 14 திகதிவரை விளக்கமறியல்

168 0

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 64 பேரையும் எதிர்வரும் 14 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர், களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றங்களின் மேலதிக நீதவானும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய கருப்பையா ஜிவராணி காணொளி மூலமாக  நேற்று வியாழக்கிழமை 30 ம் திகதி உத்தரவிட்டார்.
கடந்த 21.4.2019  உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரானின் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தில் காத்தான்குடியை சேர்ந்த  65 பேரை கைது செய்தனர்.

அதேவேளை சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 4 பேரை மட்டக்களப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து  விடுவித்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 64  பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த  வெவ்வேறு இரு வழக்கு இலக்கங்களை கொண்ட 64 பேரும் நாட்டிலுள்ள பொலநறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்களை தற்போது தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக நீதிமன்றிற்கு அழைத்துவர முடியாததையடுத்து அவர்களை காணொளி மூலமாக எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர்,களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றங்களின் மேலதிக நீதவானும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய நீதவான் உத்தரவிட்டார்.