உலகப்புகழ் பெற்ற பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் வழக்கில் கோர்ட்டு அதிரடி உத்தரவு

155 0
உலகமெங்கும் உள்ள பிரிட்னி ஸ்பியர்ஸ் ரசிகர்கள் ‘பிரி பிரிட்னி’ என்ற பிரசாரத்தின் மூலம் அவருக்கு ஆதரவு அளித்தனர்.

இந்த வழக்கில் பிரிட்னி ஸ்பியர்ஸ் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகி 20 நிமிடம் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், “என் வாழ்க்கை எனக்கு திரும்பக் கிடைக்க வேண்டும். இந்த பாதுகாவலர் ஏற்பாடு தவறானது என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்” என கூறினார். மறுபடியும் ஜூலை மாதம் 14-ந் தேதி அவர் கோர்ட்டில் மீண்டும் ஆஜராகி தனது தந்தை பாதுகாவலர் என்ற நிலையை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டு நீதிபதி பிரெண்டா பென்னி, பிரிட்னி ஸ்பியர்சை அவரது தந்தையின் பாதுகாப்பில் இருந்து விடுவித்து நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவிட்டார்.

பிரிட்னி ஸ்பியர்ஸ் பாதுகாப்பை இனி அவரது சட்டக்குழுவால் நியமிக்கப்பட்ட கணக்காளர் ஜான் ஜாபெல் கவனித்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிரிட்னி ஸ்பியர்சுக்கு பெருத்த நிம்மதியை அளித்துள்ளது.