ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோவிற்கு இன்று (01) விஷேட சத்திர சிகிச்சையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு 8 மணி நேர தீர்மானம் மிக்க சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் ஹரீன் பெர்ணான்டோவும் , தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார்.
” ஒக்டோபர் முதலாம் திகதி. நான் தீர்மானமிக்க சத்திர சிகிச்சையொன்றை எதிர்கொள்ளவுள்ளேன்.” என குறித்த நீண்ட முகப்புத்தக பதிவில் அவர் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் முதலாம் திகதி இதே போன்று வாழ்க்கையில் தீர்மானமிக்க பரிசோதனையொன்றை எதிர்நோக்கியதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.