தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 186 பேர் கைது

133 0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 186 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 79,723 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் பயணித்த 1,170 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்