வெலிக்கடை சிறையிலுள்ள மற்றொரு குழுவினர் சிறைக்கூரையில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மிரட்டி பணம் பறித்தல் மற்றும் திருட்டு போன்ற குற்றங்களுக்காக நீண்ட கால தண்டனை அனுபவிக்கும் ஒரு குழுவினரே பொது மன்னிப்புக் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 20 கைதிகள் தற்போது கூரையில் இருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்கள் கூறின.