காணிகள் மாநகர சபையால் கையகப்படுத்தப்படும் என பரப்பப்படும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானவை!

159 0

கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்குள் உள்ள காணிகள் மாநகர சபையால் கையகப்படுத்தப்படும் என பரப்பப்படும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானவை என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துகளுக்கான வரிப் பணத்திற்கான இலக்கம் மாநகர சபை யினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டமை தவறு என்றும் அதனால் ஏற்பட்ட அளெகரியத்திற்காக நான் மன்னிப்புக் கோருகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பதிவு செய்யப்படாத சொத்துக்களைக் கொழும்பு மாநகர சபை கையகப்படுத்தாது என்பதையும் நான் உறுதிப்படுத்துகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சொத்துக்களைப் பதிவு செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்றும் எந்தச் சொத்துக்களையும் கையகப்படுத்த முடியாதென்றும் அவர் உறுதியளித்துள்ளார்.