தகனம் செய்யப்படும் சடலங்களுக்கான கட்டணங்களில் மாற்றம்

173 0
யாழ்ப்பாணம் மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட கோம்பயன் மணல் மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்படும் சடலங்களுக்கான கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு, நேற்று  (28), மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, எதிர்வரும் 1ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில், மின் தகன கட்டணத்தில் மாற்றம் செய்வதற்கு, சபை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, 12 வயதுக்கு குறைந்த கொரோனா தொற்றாளர்களின் சடலங்களுக்கு 4,000 ரூபாயும் ஏனைய கொரோனா தொற்றாளர்களின் சடலங்களுக்கு 8,000 ரூபாயும் அறவிடப்படுவதென, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று அல்லாத சடலங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் அறவிடப்படுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.