தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 290 பேர் கைது

145 0

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச் சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 290 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர் என்றும் 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளனவும் பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரை 79, 537 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் உள் நுழையும் பகுதிகளில் பய ணித்த 1348 பேரும், 836 வாகனங்களும் மற்றும் வெளியேறும் பகு திகளில் பயணித்த 880 பேரும் 594 வாகனங்களும் பரிசோ தனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி நேற்றைய தினம் பயணிக்க முற்பட்ட 286 பேரும் மற்றும் 152 வாகனங்களும் திருப்பி அனுப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.